districts

img

42 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் பணிகள்

கரூர் ஆட்சியர் தகவல் கரூர், ஆக.20 - கரூர் மாவட்டத்தில் 67 விண்ணப்பங் களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 42 நீர்நிலைகளில் 26,894 கன மீட்டர் வண்டல் மண் எடுக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சி யர்  மீ.தங்கவேல் செய்தியாளர் பய ணத்தின் போது தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் விவசாய பயன் பாடு மற்றும் மட்பாண்டம் செய்வதற்கு வண்டல் மண் எடுக்கப்பட்டு வரும் நீர்நிலைகளில் ஒன்றான தோகமலை ஊராட்சி ஒன்றியம், வடசேரி ஏரியில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் ஆக.17  அன்று செய்தியாளர் பயணம் மேற் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கரூர் மாவட்டத்தில் தற்போது 42 நீர்நிலைகள், வண்டல் மண், களிமண் போன்றவற்றை வெட்டி யெடுத்து விவசாய பயன்பாடு மற்றும் மட்பாண்ட தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவைகளாக கண்ட றியப்பட்டு மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  அரசாணைகளில் தெரிவித்துள்ள படி, விவசாய பயன்பாட்டிற்கு வண்டல், களிமண் போன்றவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றிற்கு நன்செய் நிலமெனில் 75 கனமீட்டர்  (அதாவது 25 டிராக்டர் லோடுகள்) மற்றும் புன்செய் நிலமெனில் 90 கனமீட்டர் (அதாவது 30 டிராக்டர் லோடுகள்) என்ற கணக்கீட்டின்படியும், மட்பாண்ட தொழிலுக்கு நபர் ஒன்றுக்கு 60 கன மீட்டர் (அதாவது 20 டிராக்டர் லோடுகள்) வீதமும் இலவசமாக வெட்டி யெடுத்துச் செல்ல 30 நாட்களுக்கு மிகா மல் சில நிபந்தனைகளுக்குட்பட்டு அனு மதி  வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் விவசாய பயன் பாடு மற்றும் மட்பாண்ட தொழிலுக்கு வண்டல், களிமண் போன்றவற்றை இலவ சமாக வெட்டியெடுத்துச் செல்ல 26,894 கன மீட்டர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென தற்போது வரை 67 விண்ணப் பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்துச் செல்கின்றனர். மீதமுள்ள விண் ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப் பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், வண்டல் மண் எடுக்கப்பட்டு வரும் நீர்நிலைகளில் ஒன்றான  தோகமலை ஊராட்சி ஒன்றியம், வட சேரி ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவில்  வண்டல் மண் எடுக்கப்பட்டு வருவது  குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் வண்டல் மண் எடுக்க ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள 42 நீர்நிலைகள் ஒவ்வொன்றுக் கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்” என்றார்.