திருச்சிராப்பள்ளி, ஆக. 5 - தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் நியமனங்களில் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்று 11 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 40 ஆயிரம் ஆசிரியர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பணி நியமனம் வழங்க வேண்டும். அரசாணை 149-ஐ முற்றிலுமாக நீக்கிட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை 177-ஐ உடனடி யாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வடிவேல் சுந்தர், மாநிலச் செயலாளர் சண்முகப்பிரியா, மாநிலப் பொருளா ளர் ஹரிஹரசுதன், மாநில அமைப்பா ளர் ஸ்ரீதர், மாநில பொறுப்பாளர் ஏகாம் பரம் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடு பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், “கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 40 ஆயி ரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு இதுவரை ஆசிரியர் பணி வழங்கப்பட வில்லை. இவர்கள் கடந்த 11 ஆண்டு காலமாக அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்.
இவர்கள் தங்களுக்கு வேலை கேட்டு உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், டெட் சான்றிதழ் ஒப்ப டைப்பு போன்ற 60-க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இச்சூழலில் பணம் படைத்த 410 பேர் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு மட்டும் பணி வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுள்ளனர். தொடர்ந்து போராடிவரும் 40 ஆயிரம் ஆசிரி யர்களுக்கு வேலை வழங்காமல், தங்களை விட மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் நீதிமன்றத்தை நாடி அவர் களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுள் ளனர்.
உரிமைக்கான போராட்டத்தில் எந்த விதத்திலும் பங்கேற்காத 410 பேருக்கு பணி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது. மேலும், இந்த தீர்ப்பு வெளிவந்தவுடன் சேலத்தைச் சேர்ந்த ஆசிரியர் மாலதி மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண் டார்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் 40 ஆயிரம் ஆசிரியர் களையும் பணி நியமனம் செய்ய வேண்டும். தேர்ச்சி பெற்று காத்திருப்ப வர்களுக்கு இன்னொரு நியமனத் தேர்வு என்ற அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசாணை 177-ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தேர்ச்சி பெற்றும் நியமனத் தேர்வு என்ற நிர்ப்பந்தத்தால் உயிரை விட்ட ஆசிரியர் மாலதியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக முதல்வர் எங்கள் பிரச்சனை யில் தனி கவனம் செலுத்தி, விரைவில் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்” என்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் சென்னை, கன்னியாகுமரி, நாகை, கோவை என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இரண் டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் பங்கேற்றனர்.