புதுக்கோட்டை, நவ.4 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சிய ரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கை கள் அடங்கிய 387 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப் பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படை யில், அறந்தாங்கி கோட்டாட்சியர் ச. சிவக்குமாருக்கு பரிசு கோப்பை வழங்கி ஆட்சியர் பாராட்டினார்.