திருவாரூர், ஜூலை 2 - திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றியம் அருகே உள்ள நார்த்தங்குடியில் தொடர் விபத்து நிகழ்வதால், நார்த்தங்குடியில் பகுதி யில் அரைவட்ட சாலை அல்லது வேகத்தடை அமைக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வலங்கைமான் ஒன்றியக்குழு கோரிக்கை வைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணத்தில் இருந்து நீடாமங்கலம் வரை சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் தஞ்சாவூரில் இருந்து திருவா ரூர் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, கொர டாச்சேரி, நீடாமங்கலம், சாலிய மங்கலம், அம்மாபேட்டை மற்றும் நார்த்தங்குடி உள்ளிட்ட பல இடங் களில் புறவழிச்சாலை அமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள நார்த்தங்குடி பகுதியில் இருந்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை, நீடாமங்கலம் நகரப் பகுதிக்கு செல்லாமல் கொரடாச்சேரியில் இருந்து கோவில்வெண்ணி வரை செல்லும் புறவழிச்சாலையாக உள்ளது. இந்த புறவழிச் சாலையில் வரும் வாகனங்கள் அதிவேகத்தில் கடந்து செல்கின்றன. இந்த புற வழிச் சாலையும், நீடாமங்கலம் முதல் கும்பகோணம் வரை செல்லும் சாலையும் இணையும் இடமாக நார்த்தங்குடி உள்ளது. 3 பேர் பலி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிபிஎம் உறுப்பினரும், அரசு ஊழியருமான மோகன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்தில் பலியானார். இந்நிலையில் அதே இடத்தில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பேர், இந்தப் புறவழிச்சாலை வழியாக திருச்சி நோக்கி சென்று திரும்பிய போது, அடையாளம் தெரியாத வாகன மோதி படுகாயம் அடைந்தனர். இதில் கோபி, சத்யராஜ் ஆகி யோர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். மணிகண்டன் மட்டும், திரு வாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக் காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து காவல்துறையினர் நடத்திய விசார ணையில், விபத்தில் சிக்கியவர்கள் பூதங்குடி பகுதியைச் சேர்ந்த மணி கண்டன் (31), சத்யராஜ் (26), கோபி (24) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் கம்பி கட்டும் தொழி லாளர்கள் என்பதும், திருச்சிக்கு வேலை சம்பந்தமாக சென்றபோது விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது. இந்த விபத்தையொட்டி வலங் கைமான் ஒன்றியச் செயலாளர் என். இராதா கூறுகையில், “இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரி ழப்பு நிகழ்கிறது. உடனடியாக இந்தப் பகுதியில் அரைவட்டச் சாலை அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும். இந்தப் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததும் விபத்து நடப்பதற்கு காரணமாக உள்ளது. எனவே உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்க வேண்டும். விபத்து நிகழ்ந்த இடத்தை கள ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.