நண்டாலாறு கரையில் உடைப்பு 2500 ஏக்கருக்கும் aபயிர்கள் நீரில் மூழ்கின
மயிலாடுதுறை, டிச.15 - வங்கக் கடலில் நிலை கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்தது. இதனால் ஆறுகள் வாய்க்கால்களில் முழு கொள்ளளவுடன் மழை வெள்ளநீர் செல்கிறது. நண்டலாற்றில் பல்வேறு வாய்க்கால்களில் இருந்து வடிந்து வரும் மழை வெள்ளநீர் நண்ட லாற்றில் கலந்து முழு கொள்ளள வுடன் இரண்டு பக்க கரைகள் ததும்ப சென்று கடலில் கலந்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி அருகே நல்லாடை கிராமத்தில் நண்டலாற்றில் பல்வேறு இடங்க ளில் கரை வழிந்து வெள்ளம் சென்ற நிலையில், நல்லாடை காவல் சோத னைச் சாவடி அருகே நண்டலாற்று கரை வழிந்து ஏற்பட்ட உடைப்பின் காரணமாக நண்டலாற்றில் சென்ற வெள்ள நீர் விவசாய நிலங்களில் உட்புகுந்தது. இதனால் நல்லாடை கொத்தங் குடி விளாகம், அரசூர் ஊராட்சி களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 2500 ஏக்கர் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக, விவ சாயிகள் இடுப்பளவு நீரில் இறங்கி மூழ்கியுள்ள பயிர்களை எடுத்துக் காண்பித்து வேதனை தெரிவித்தனர். மேலும் மங்கைநல்லூர், மலைக்குடி, எடக்குடி, பெரம்பூர், சேத்தூர் வழியாக வாய்க்கால்களி லிருந்து வடிந்து வரும் வெள்ள நீர், தங்கள் பகுதியில் செல்லும் கோனேரி பிள்ளை வாய்க்கால் வழி யாக நண்டலாற்றில் கலந்து வரு கிறது. நண்டலாற்றில் செல்லும் முழு கொள்ளளவு நீரால் வாய்க்கா லில் செல்லும் வெள்ளநீரும், தங்கள் பகுதி விவசாய நிலத்திற்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக விவசாயிகள் கூறுகின்றனர். நண்டலாற்று வெள்ள நீரால் விவசாய நிலங்கள் மூழ்கி, ஏரி போல் காட்சியளிக்கின்றன. ஏக்க ருக்கு ரூ.30,000 வரை செலவு செய்து பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில், அவை நீரில் மூழ்கியுள்ள தால் உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்ன தாக பொதுப்பணி துறையினர் நண்ட லாற்றில் கரை வழிந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டை களைக் கொண்டு அடைத்துள்ள னர். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பாதிப்புகள் குறித்து நேரில் பார்வையிட்டார். இதனிடையே மார்க்சிஸ்ட் கட்சி யின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலை வர் டி,சிம்சன், மார்க்சிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சந்திர மோகன் ஆகியோர் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தலைவர்கள், “பாதிக்கப் பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ரூ.35,000 நிவராண உதவியாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சி யர் உடனடியாக தமிழ்நாடு அரசி டம் பாதிப்புகள் குறித்து முறை யிட்டு நிவாரணத்தை துரிதமாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஞாயிறன்று திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்நகர், கருமண்டபம் குளத்துக்குரை, பிராட்டியூர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, உடனே மழைநீரை வெளியேற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஒத்தமாந்துறை அமராவதி ஆற்றுப் பகுதியில் அதிகளவு நீர் செல்வதையொட்டி, மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தொடர் கனமழையால் 23 ஆவது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நகர்மன்றத் தலைவர் இரா.ஆனந்த் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.