மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2,3,4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, திருவாரூர் அருகே உள்ள கூடூரில், திருவாரூர் மாவட்ட வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் முதல் கட்ட நிதி ரூ.2 லட்சத்துக்கான காசோலை, மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது.