districts

img

தென்னங்குடி ஜல்லிக்கட்டில் 23 பேர் காயம்

புதுக்கோட்டை, மார்ச் 2 - புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தைச் சேர்ந்த தென்னங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 23 பேர் காயமடைந்தனர். தென்னங்குடி முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடத்தப் பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியை, இலுப்பூர்  வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தொ டங்கி வைத்தார். குளத்தூர் வட்டாட்சியர் கவி யரசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 805 காளைகள் பங்கேற்றன. 250 மாடுபிடி வீரர்கள் கலந்து  கொண்டு காளைகளைத் தழுவ முயற்சித்த னர். இதில் வென்ற வீரர்களுக்கும், காளை களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.  11 மாடு பிடி வீரர்கள், 6 காளைகளின் உரி மையாளர்கள், 6 பார்வையாளர்கள் என மொத்தம் 23 பேர் காயமடைந்தனர். இவர்களில்  4 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக் காக அனுப்பி வைக்கப்பட்டனர்.