districts

2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தஞ்சாவூர், ஜூலை 4-  

     தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்  குறிப்பில், “தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான கணபதி நகர் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் எலிசா நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் பிரதான குழாய் புதிதாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.  

     இதனால் வார்டு எண் 42 முதல் 51 வரையிலான வார்டுகளுக்கு ஜூலை 5 (புதன்கிழமை), ஜூலை 6 (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்க ளுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தேவை யான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொண்டு சிக்கனமாக பயன்படுத்  திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

;