districts

img

தஞ்சையில் ‘தமிழக நடுகல் மரபு’ வரலாற்று கண்காட்சி

தஞ்சாவூர், நவ.20 -  உலக மரபு வாரத்தை யொட்டி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா  முத்தையா ஆராய்ச்சி நூல கம் மற்றும் யாக்கை மரபு அறக்கட்டளை இணைந்து நடத்தும், ‘தமிழக நடுகல் மரபு’ என்ற ஒரு வாரகால நடுகல் வரலாற்று கண் காட்சி தஞ்சாவூர் அரண் மனை வளாகத்தில் உள்ள  சங்கீத மஹாலில் ஞாயிற்றுக் கிழமை துவங்கியது.  இதனை தஞ்சாவூர் தமிழ்  பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வி.திரு வள்ளுவன் துவக்கி வைத்து  பேசினார். விழாவில் தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை இணை இயக்குநர் இரா.சிவானந்தம், தமிழ்  பல்கலைக்கழக கலைப் புலத் தலைவர் பெ.இளை யாப்பிள்ளை, யாக்கை மரபு  அறக்கட்டளை அறங்காவ லர் அருண் ராஜா மோகன் ஆகியோர் பேசினர்.  முன்னதாக தொல்லியல் அலுவலர் தங்கதுரை வர வேற்றார். யாக்கை மரபு அறக்கட்டளை செயலாளர் குமரவேல் ராமசாமி நன்றி கூறினார்.