திண்டுக்கல், டிச.6- திண்டுக்கல் மாவட்டம், மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கொரோனா கால படுக்கை, சிலிண்டர் உள்ளிட்ட தள வாடங்கள் அடுக்கிவைக்கப்பட்டு, வகுப்பு நடத்த இடையூறாக உள் ளது. இவைகளை உடனடியாக பள்ளியிலிருந்து எடுத்து மருத்துவ மனைகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி யுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு மருத்துவ மனைகளில் இடமின்றி பள்ளி, கல் லூரிகளில் படுக்கைகள் ஏற்படுத் தப்பட்டு நோயாளிகள் தனி மைப்படுத்தப்பட்டனர். திண்டுக் கல் எம்.வி.எம். கலைக்கல்லூரி என பல இடங்களில் நோயாளிகள் தனி மைப்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மையத்திலும் நூற்றுக்கும் மேற் பட்ட படுக்கைகள் உள்ளன. இந்த படுக்கைகளை, படுக்கை வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனை களுக்கு அனுப்பியிருக்கலாம். தற் போது கொரோனா பெருந்தொற்று காலம் கட்டுக்குள் வந்ததையடுத்து எம்.வி.எம். கலைக்கல்லூரியில் இருந்த படுக்கை, சிலிண்டர் உள் ளிட்ட மருத்துவ தளவாட பொருட் கள் அனைத்தும் கல்லூரியின் காம்பவுண்ட் சுவர் அருகே அமைந்துள்ள மீனாட்சிநாயக் கன்பட்டி அரசு உயர்நிலைப்பள் ளிக்கு கொண்டுவரப்பட்டு, வகுப்ப றைகளில் வைத்துவிட்டனர். தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் பயிலும் வகுப்பறைகளில் பாதி இடத்தை இந்த கொரோனா படுக்கைகள் நிரம்பியுள்ளதால் பாடம் நடத்து வதற்கு இடையூறாக உள்ளது. இவற்றை அப்புறப்படுத்த கல்வித் துறையும், மருத்துவத்துறையும் முன்வர வேண்டும் என்று பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வியக்கத்தின் சார்பாக மாவட்டக்குழு உறுப்பினர் க.பால முருகன், திண்டுக்கல் ஆட்சியர் முனைவர் விசாகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பிய கடிதத்தில், இந்த கல்லூரி வளாகத்தின் அரு காமையில் கட்டி முடிக்கப்பட்டி ருந்த மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும் கொரோனோ சிகிச்சை மையம் அமைப்பதற்காக கட்டில், மெத்தை, தலையணை, குடிநீர், சுத்திகரிப்பு இயந்திரம், பிராணவாயு உருளை கள், குளுகோஸ் ஸ்டாண்டுகள் உள்ளிட்ட ஏராளமான மருத்துவ தளவாடங்கள் பள்ளியில் வைக்கப் பட்டுள்ளன. கொரோனோ பெருந் தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மாநில அரசு கொரோனோ பெருந்தொற்று காலத்தில் விதித்தி ருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப் பட்டுவிட்ட போதிலும் இன்றளவும் மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் வகுப்ப றைகள் மற்றும் அறிவியல் ஆய்வ கம், நூலகம் உள்ளிட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ தள வாட பொருட்கள் அப்புறப்படுத்தப் படவில்லை. இச்சூழலில் பள்ளி இயங்கி வருவது மாணவ, மாண வியருக்கு பல்வேறு வகையான இடையூறுகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள கட்டில் களால் விபத்தும் உருவாகும் சூழல் உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து - மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் குவித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவ தளவாட பொருட்களை உரிய இடமாற்றம் செய்து - பள்ளி மாணவ மாணவியருக்கு போதிய வகுப்பறை வசதியையும் பாது காப்பான பள்ளி வளாகத்தையும் உத்தரவாதம் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.