districts

img

மின்வேலிகளை தகர்த்து மக்காச்சோளக்காட்டில் புகுந்து கன்னிவாடி அருகே யானைகள் அட்டகாசம்

திண்டுக்கல், டிச.3- மின்வேலிகளை தகர்த்து மக்காச் சோளக் காட்டுக்குள் புகுந்த யானைகள் அட்டகாசம் தொடர்பாக விவசாயி, திண்டுக்  கல் ஆட்சியரிடம் இழப்பீடு கோரி புகார் மனு அளித்துள்ளார். அது பற்றிய விவரம்  வருமாறு:  

தெத்துப்பட்டி மேற்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் ஒரு விவ சாயி. இவரது தோட்டத்தில் இரண்டரை  ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.  நன்கு வளர்ந்திருந்த மக்காச்சோளப் பயிர்களை யானைக்கூட்டம் சேதப்படுத்தி யுள்ளது. தினசரி பயிர்களை நாசம் செய்து  வருகிறது.

சோலார் மின் வேலியையும் தகர்த்து காட்டுக்குள் சென்ற யானைகள் மக்காச்சோளம் மட்டுமல்லாது, தென்னை, தக்காளி, உள்ளிட்ட பயிர்களையும் நாசம் செய்துள்ளதாக கூறுப்படுகிறது. இது தொடர்பாக கன்னிவாடி வனச்சர கத்தில் புகார் கொடுத்துள்ளார். வனத்துறை  அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென் றுள்ளனர். இந்நிலையில் விவசாயி ஆசைத்  தம்பி திங்களன்று மனு நீதி நாளில் திண்  டுக்கல் ஆட்சியரைச் சந்தித்து மனுக் கொடுத்து இழப்பீட்டு தொகை கிடைக்க நட வடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.