districts

சாலை விபத்து: 50க்கும் மேற்பட்டோர் காயம்

தருமபுரி, ஜூலை 16- பாலக்கோடு அருகே இரு தனியார் பேருந் துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டிலி ருந்து திங்களன்று மாலை தனியார் பேருந்து  ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாரண்டஅள்ளிக்கு சென்று கொண்டிருந் தது. இதேபோன்று, வெள்ளிச்சந்தையில் இருந்து, பாலக்கோடு நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டி ருந்தது. பாலக்கோடு சர்க்கரை ஆலையை அடுத்த பாரதிநகர் அருகே சாலையின் குறுக்கே ஆட்டோ வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக மாரண்டஅள் ளிக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் தங்கராஜ் (46) என்பவர் திடீ ரென பேருந்தை வேறு திசைக்கு திருப்பி னார். அப்போது, எதிர்பாராத வகையில் எதிரே பாலக்கோடு நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத் தில் இரு பேருந்துகளிலும் பயணித்த பள்ளி  மாணவ, மாணவிகள், தனியார் நிறுவன ஊழி யர்கள், பொதுமக்கள் என 50க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவ லறிந்த பாலக்கோடு காவல் துறையினர், அப் பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனை, தரு மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி நாடா ளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிர மணி, பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர், மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இவ் விபத்து குறித்து பாலக்கோடு காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த சாலை விபத்தில்  காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக் கும், அவர்களது உறவினர்களுக்கும் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆறுதலைத் தெரிவித்ததோடு, பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சமும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா  ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவா ரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட் டுள்ளார்.