districts

img

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, ஜூன்-7 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழக கர்நாடக எல்லைப் பகுதி யான பிலிகுண்டுளுவில் நீர்வரத்து வியாழனன்று வரை வினாடிக்கு 1500  கன அடியாக நீடித்து வந்தது. இந்த  நிலையில் தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்யும் மழையின் காரணமாக நீர்வரத்து தற் போது அதிகரித்து வினாடிக்கு 2000 கன அடியாக நீடித்து வருகிறது. இந்த நீர் வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. மேலும் காவிரி கரை யோர பகுதிகளில் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருவதன் காரண மாக மேலும் இந்த நீர்வரத்து அதிக ரிக்க வாய்ப்புள்ளதால், மத்திய நீர்வ ளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.