districts

img

மாட்டுத் தொழுவமாக மாறி வரும் பூட்டிக் கிடக்கும் ரேசன் கடை ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

தஞ்சாவூர், டிச.9 -  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரத்தில் மாட்டுத் தொழுவம் போல காட்சியளிக்கும், புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு வலியுறுத்தியுள்ளது.  சேதுபாவாசத்திரம் கடைவீதி அருகே, பட்டுக்கோட்டை சாலை பகுதி யில் ரேசன் கடை செயல்பட்டு வந்தது.  இந்த கட்டிடம் போதுமான இடவசதி இல்லாமல் பழுதடைந்த நிலையில் இருந்த தால், தற்காலிகமாக மாற்று இடத்தில் ரேசன்  கடை இயங்கி வந்தது. இந்நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு பழைய  கட்டிடத்தை இடித்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடையை கட்டியது. இதனை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.  ஆனால் இந்த ரேசன் கடை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடப்பதால், மாடுகள் ஓய்வெடுக்கும் இடமாக மாறி, சாணம், குப்பை கூளங்கள் நிறைந்து, மாட்டுத் தொழுவமாக மாறி வருவ தாக இப்பகுதி மக்கள் வேதனைப்படுகிறார்கள்.  சிபிஎம் வலியுறுத்தல்  மாடுகளை கட்டி வைத்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துபவர்கள் மீது அரசு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். பூட்டிக் கிடக்கும்  ரேசன் கடையை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செய லாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.