districts

மாதாந்திர உதவித் தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளை ஜூலை 16 இல் ஆட்சியர்களிடம் ஒப்படைக்கும் போராட்டம்

தஞ்சாவூர், ஜூலை 4 -  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்  தஞ்சை மாவட்டக்குழு கூட்டம் , மாவட்டத் தலைவர்  டி.கஸ்தூரி தலைமையில் நடை பெற்றது. இதில், மாநில பொதுச் செயலாளர் பி.ஜான்சிராணி ,  மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் பங்கேற்றனர். மாதாந்திர உதவித் தொகைக்காக மனு கொடுத்து கடந்த ஒரு வருட கால மாக காத்திருப்போர் பட்டியலில் இருக் கக்கூடிய மாற்றுத்திறனாளிகளை ஒன்று திரட்டி எதிர்வரும் ஜூலை.16 செவ்வாய்க் கிழமை அன்று காலை 10 மணியளவில்  தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைப்பது,

 மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மாக இருக்கக்கூடிய100 நாள் வேலைத் திட்டத்தை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் துவக்கி, கிரா மங்களில் இருக்கக்கூடிய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

அதோடு முழுமையான சம்ப ளம் ரூ. 319 ஐ வழங்கட வேண்டும்.  மாற்றுத்திறனாளிகள் வசிக்கக்கூடிய குடும்பங்களில் உள்ள குடும்ப அட்டை களை ஏஏஒய் குடும்ப அட்டையாக மாற்றி, மாதம் தோறும் 35 கிலோ அரிசி ரேஷன் கடைகளின் மூலம் இலவசமாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மேலும், தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தஞ்சை மாவட்டத்தின் சார்பாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 1,500 மாற்றுத்திறனாளிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் மாற்றுத்திறனா ளிகளை ஒப்படைக்கும் போராட்டமாக நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.