தஞ்சாவூர், ஜூலை 6- காவிரி பிரச்சனையில் ஒன்றிய அரசு எந்த முன்னெடுப்புகளையும் செய்யா மல் வேடிக்கை பார்க்கிறது என தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார். தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது: எடப்பாடி பழனிசாமியுடன் ரகசிய மாக பேசியது குறித்து தற்போது அண்ணாமலை பேசி வருகிறார்.
அரசியல் கட்சிகள் இடையே ரகசியமாக கூட்டணி குறித்து பேசியதை தன்னு டைய தோழமைக் கட்சியை காட்டிக் கொடுப்பதும், அதன் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி பேசுவதும் தலைமைப் பண்புக்கு அழகல்ல. இதுதான் பாஜக வின் தலைமைப் பண்பு. உருது மொழியைத் திணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை கூறியுள்ளார். இது, மிக மலிவான அரசியல். சமூகத்துக்கு எதிராக விஷமத் தனத்தை விதைப்பதற்கு தயாராகி யுள்ளார். இதையும் தமிழ்நாட்டு மக்கள் முறியடிப்பர்.
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி, காவிரியில் தமிழ்நாட்டுக் குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடுவதற்கு, ஒன்றிய அரசு அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த பிரச்சனை யில் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மாநிலங்களுக்கு இடையே அரசியல் செய்வது,
ஒரு சாரார் பக்கம் நிற்பது போன்ற வேலைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. திமுக - காங்கிரஸ் இடையேயான உறவு உண்மையானது; கண்ணியமா னது. மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள இக் கூட்டணி இன்னும் பல தேர்தல்களில் வெற்றி பெறப் போகிறது. விக்கிர வாண்டி இடைத்தேர்தலில் திமுக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.சுதா, கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பி னர் செ.ராஜேஷ்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் எஸ். ராம்மோகன், மாவட்டத் தலைவர்கள் து. கிருஷ்ணசாமி வாண்டையார் (தெற்கு), டி.ஆர்.லோகநாதன் (வடக்கு), பி.ஜி. ராஜேந்திரன் (மாநகரம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.