districts

தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது: மேயர் தகவல்

தஞ்சாவூர், அக். 29-  தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி களில் முதன்முதலாக தஞ்சாவூர் மாநக ராட்சிதான் கடன் இல்லாத மாநகராட்சி யாக உருவெடுத்துள்ளது என தஞ்சா வூர் மாநகராட்சி மேயர் சண்.ராம நாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற  கூட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்துக்கு மேயர் சண்.ராம நாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.சர வணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து மா மன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதி காரிகள் கலந்து கொண்டனர். 51 ஆவது வார்டில் விரிவாக்க பகுதி களில் சில இடங்களில் காலியாக உள்ள  மனைகளில் செடி, கொடிகள் படர்ந்துள் ளன. இதனால் கொசு உற்பத்தி அதிக மாக உள்ளது. பாம்புகள் உள்ளிட்ட விஷ  ஜந்துகள் வீட்டுக்குள் வருகின்றன. எனவே காலிமனையில் உள்ள செடி களை அகற்ற உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி உத்தரவிட வேண்டும். மாதவராவ் நகரில் இருந்து அண்ணாநகர் வரை மழைநீர் வடிகால் ஏற்படுத்தி தர வேண்டும். தீபாவளி நேரத்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஏராளமான தரைக் கடைகள் அமைக்கப்பட்டன. இதற்கு  மாநகராட்சி அனுமதி கொடுக்க வில்லை எனக் கூறியது. அப்படி என்றால் எப்படி இந்த கடைகள் அமைக் கப்பட்டன. மாநகராட்சி இடத்தில் அத்து மீறி நுழைந்தவர்கள் மீது என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகள் மற்றும்  கேள்விகளுக்கு ஆணையர் சரவணக் குமார் பதிலளிக்கையில், “வியாபாரி கள் அவர்களாகவே கடை அமைத்த னர். இனி வரும் காலங்களில் தீபாவளி  நேரத்தில் வியாபாரிகள் விருப்பத் துக்கு ஏற்ப அவர்களாகவே தரைக்கடை கள் அமைக்க அனுமதிக்கப்படுவர்” என்றார். மேலும் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறு கையில், “தமிழகத்தில் உள்ள 20 மாநக ராட்சிகளில் முதன்முதலாக, தஞ்சாவூர் மாநகராட்சிதான் கடன் இல்லாத மாநக ராட்சியாக உருவெடுத்துள்ளது. இதுவரை மாநகராட்சி சார்பில் இருந்த  அனைத்து கடன்களும் அடைக்கப்பட்டு  விட்டன. மாநகராட்சி கடைகள், டெண்டர் வெளிப்படை தன்மையாக நடந்ததால் மாநகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தது. இன்னும் பல்வேறு வணிக வளாகங்கள் கட்டப் பட்டு பொது ஏலமிடப்பட உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு இன்னும் அதிக வருவாய் கிடைக்கும். கூட்டத்தில்  மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற் றப்படும்” என்றார்.