தஞ்சாவூர், ஜூன் 3- தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மை யியல் துறையில் இளங்கல்வி யியல் (பி.எட்.,) இரண்டா ண்டு முழுநேரப் பட்டப் படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.,) இரண்டாண்டு முழு நேரப் பட்டப் படிப்பிற்கு 2024-2025ஆம் கல்வி யாண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூன் 3 (திங்கள்கிழமை) முதல் துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் மாணவர்களுக்கு முதல் விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பல்கலைக் கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் கு.சின்னப்பன், முனைவர் ஆனந்த் அரசு, உடற்கல்வி ஆசிரி யர் செ.பிரபாகரன் மற்றும் உதவி யாளர் கார்த்திக் ராஜா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஜூலை 31 ஆம் தேதி வரை நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in, தொலைபேசி எண் 04362-226720 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என பதிவாளர் (பொ)சி.தியாகராஜன் தெரிவித்துள் ளார்.