districts

img

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வள்ளலார் குறித்த பேச்சுப் போட்டி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வள்ளலார் குறித்த பேச்சுப் போட்டியில், தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியின், நுண்ணுயிரியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி மை.ஆஷிகா ஆஃப்ரின் வெற்றி பெற்றார். அவருக்கு பாரதியாரின் எள்ளுப்பேரன் கவிஞர் நிரஞ்சன் பாரதி சான்றிதழ் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவிக்கு, மருது பாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன், கல்லூரி முதல்வர் முனைவர் விஜயா, கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

;