தஞ்சாவூர், ஜூன் 5- மாற்றுத்திறனாளிகளுக்கு அடை யாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று இடங் களில் நடைபெற உள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடை யாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வரு கிறது. இதுநாள் வரை மாற்றுத் திறனா ளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம் கள் நடைபெற உள்ளன.
ஜூன் 11 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) தஞ்சாவூர் ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலும், ஜூன் 18 அன்று (செவ்வாய்க்கிழமை) கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில், கே.எம்.எஸ்.எஸ் வளாகத்தி லும், ஜூன் 25 (செவ்வாய்க்கிழமை) அன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, கிராம சேவை கட்டி டத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் எலும்பு முறிவு, காது-மூக்கு- தொண்டை பிரிவு, மன நலம் மற்றும் கண் மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளனர். அவ்வாறு மருத்துவ அலுவ லர்கள் வழங்கும் சான்றிதழின் அடிப் படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில், இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.
இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (யுடிஐடி) விண் ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள், முகாமில் உரிய ஆவணங்களுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான அடை யாள அட்டை நகலுடன் வந்து விண்ணப் பித்து பயன்பெறலாம்” எனத் தெரிவித் துள்ளார்.