districts

மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், மே 17 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய்  கோட்டாட்சியர் அலுவலகத் தில், பட்டுக்கோட்டை கோட்ட  அளவிலான மாற்றுத்திற னாளிகள் குறைதீர் கூட்டம்  கோட்டாட்சியரின் நேர்முக  உதவியாளர் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, மதுக்கூர் நிர்வாகி பால சுப்பிரமணியன், சேதுபாவா சத்திரம் நிர்வாகி செந்தில்குமார் ஆகியோர் பேசுகையில், “முகாம்களில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்படும் மனுக் களுக்கு, உரிய ரசீது வழங்க  வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற அரசு ஆணையை, ஒன்றிய அலுவலர்கள் மதிப்ப தில்லை. எனவே, அவர்க ளுக்கு இது குறித்த அர சாணையை அனுப்பி வைத்து, நூறு நாள் வேலைத்  திட்டத்தில் மாற்றுத் திற னாளிகளுக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்.  மாற்றுத் திறனாளி களுக்கு என தனியாக முகாம்  நடத்தி, தகுதியுள்ள மாற்றுத்  திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். பேருந்து பயண சலுகை கட்ட ணத்திற்கு உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில், அவர்கள் அமர்வதற்கான இடத்தை நடத்துநர்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினர்.