இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு கோரி, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புமாறு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டத்தின் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. சங்க பொறுப்பாளர்கள் ஜோன்ஸ், பழனியான்டி, நாகநாதன், சேகர், லோகபாபு, சிவாஜி, அரசு ஆகியோர் மனு அளிக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.