districts

img

மண்டகமேடு பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு வீடு தேடி சென்று சான்றிதழ் வழங்கிய தஞ்சை ஆட்சியர்

கும்பகோணம், ஏப்.2 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மண்டகமேடு என்ற குக்கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு, சாதி சான்றிதழ்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வீடு தேடி சென்று வழங்கினார். வேளாண்மை பாதுகாப்பு சார்ந்த பாம்பு மற்றும் எலி பிடித்தல் போன்ற வேலைகளை பிரதான தொழிலாக செய்து வாழ்பவர்கள் இருளர் பழங்குடி  சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின்  45 குடும்பங்கள் கும்பகோணம் அருகே  மண்டகமேடு கிராமத்தில் வசித்து வரு கின்றனர். இவர்களது குழந்தைகள் பல்வேறு  பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை சாதிச் சான்று  வழங்கப்படவில்லை. அதனைத் தொ டர்ந்து, இவர்கள் தங்களுக்கு இருளர் பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆட்சியரின் கவனத்திற்கு வந்தவு டன் இவர்கள் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து கும்ப கோணம் கோட்டாட்சியரிடம் விசா ரணை நடத்த தஞ்சை மாவட்ட ஆட்சி யர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கும்பகோணம் கோட்டாட்சியர் லதா நேரடியாக சென்று கள ஆய்வு மேற் கொண்டதில், இவர்கள் அனைவரும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வர்கள் என்பது உறுதியானது. கோட்டாட்சியர் அளித்த அறிக்கை ஏற்கப்பட்டு அதனடிப்படையில் தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர், மண்டகமேடு கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களின் 16 குழந்தைகளுக்கு, அவர்கள் வசிக்கும்  வீடுகளுக்கே நேரிடையாக சென்று சாதிச் சான்றிதழ்களை வழங்கினார்.