பாபநாசம், ஜூலை 27 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை ஊராட்சி, பார்வதிபுரம் கிராமத்தில் அமைந் துள்ள ஆதிதிராவிடர் சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, அப்பகுதி மக்களின் கோரிக் கையை நிறைவேற்றும் வகையில், ஈமக்கிரியை மண்டபம், சுற்றுச்சுவர் மற்றும் சிமெண்ட் அணுகு சாலை அமைக்க பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17 ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து அப்பணிகள் நிறைவு பெற்றன. இந்நிலையில், பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பார்வதிபுரத்திற்குச் சென்று முடிந்த திட்டங்களை பார்வை யிட்டார். இதில் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சுதா, மாவட்ட கவுன்சிலர் பாத்திமா ஜான், ஒன்றியக் கவுன் சிலர் அனீஸ்பேகம், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் அறிவழகன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.