districts

ஜூலை 15 தஞ்சையில் புத்தக திருவிழா தொடக்கம்

தஞ்சாவூர், ஜூன் 26 -  தஞ்சாவூர் மாவட்ட நிர்வா கம் சார்பில், அரண்மனை வளாகத்தில் ஜூலை 15 ஆம்  தேதி முதல் புத்தகத் திரு விழா தொடங்குகிறது.  தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அடுத்த மாதம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்வது உட்பட பணிகளை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரங்குகள்  அமைக்கப்படும் இடம், பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி, வாகனங்கள் நிறுத் தும் பகுதி உட்பட பல்வேறு  பணிகள் குறித்து கேட்டறிந் தார். பின்னர் மாவட்ட ஆட்சி யர் செய்தியாளர்களிடம் கூறு கையில், “தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென் னிந்திய புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) அமைப்பு இணைந்து ஜூலை 15 ஆம் தேதி புத்தக திருவிழாவை தொடங்கி 25 ஆம் தேதி வரை நடத்துகிறது. புத்தகக் கண்காட்சியின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே வாசிப்புத் திறனை மேம் படுத்த முடியும். அதே போல் புத்தகம் வாசிக்கும்  வாசகர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத் துடன் இக்கண்காட்சி நடை பெற உள்ளது. இதில் ஏராள மான புத்தக விற்பனை யாளர்கள், வெளியீட்டா ளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் கருத்த ரங்கு, சொற்பொழிவு, கவி யரங்கம் ஆகியவையும் நடை பெறும். இதற்காக 108 அரங்கு கள் அமைக்கப்பட உள்ளன”  என்றார். ஆய்வின் போது மாநக ராட்சி ஆணையர் க.சரவணக் குமார், நகர்நல அலுவலர் நமச்சிவாயம், சரஸ்வதி மகால் நூலக அறங்காவலர் சிவாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் பலர் உடனிருந்தனர்.