தஞ்சாவூர், மார்ச்19 தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்வி நிறு வனங்களில் கல்லூரி நாள் விழா கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மரு துபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தொலைக்காட்சி பட்டிமன்றப் புகழ் கவிஞர். மோகனசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மருதுபாண்டியர் கல்லூரி, முதல்வர் மா.விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன் ஆகி யோர் ஆண்டறிக்கை வாசித்தனர். புலத்தலைவர் (ஆராய்ச்சி) கோ.அர்ச்சுனன் வாழ்த்திப் பேசினார். முன்னதாக துணை முதல்வர் ரா.தங்க ராஜ் வரவேற்றார். நிறைவாக உயிர் வேதி யியல் துறைத்தலைவர் வே.இராமமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மருது பாண்டியர் கல்லூரி தமிழ்த்துறைத் தலை வர் வீ. வெற்றிவேல், உதவிப்பேராசிரியர் கி.உஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.