தஞ்சாவூர், நவ.29- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்பட கில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்படுத்தி மீன்பிடித்தது கண்டு பிடிக் கப்பட்டது. மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், மீன்வள ஆய்வா ளர் மல்லிப்பட்டினம் கெங்கேஸ்வரி, மீன்வள சார் ஆய்வாளர் சேதுபாவாசத்தி ரம் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் சாகர் மித்ரா, அப்துல் நிவாஸ், கார்த்திக்கேயன், ஐெயபிரதா ஆகியோர் கீழத்தோட்டம் கடற்கரையிலிருந்து புறப்பட்டு முத்துப் பேட்டை மீன்பிடி பகுதிக்கு ஆய்வுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, தொலைவில் இரண்டு இழுவை படகுகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அருகில் சென்றபோது ஒரு விசைப்படகு விரைந்து சென்று விட் டது. நின்று கொண்டிருந்த ஒரு விசைப் படகு, விதிகளுக்கு புறம்பாக இரண்டு நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருப்பது கண்டறி யப்பட்டு, தமிழ்நாடு மீன்பிடிப்பு ஒழுங்கு முறை சட்டம் 1983-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தவறு செய்யும் படகு உரிமையாளர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.