தஞ்சாவூர், ஜூன் 29 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தோழரும், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட அலுவலகத்தில் கார் ஓட்டுநராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய தோழர் மூர்த்தி திடீர் மாரடைப்பால் காலமானார்.
அன்னாரது இறுதி நிகழ்ச்சி கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநிலக் குழு உறுப் பினர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மூத்த தோழர் என்.சீனிவா சன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், கே.பக்கிரிசாமி, சி. ஜெயபால், பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், க.அருள ரசன், எம்.செல்வம், என்.சரவணன், சுரேஷ்குமார், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.வாசு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, சிஐடியு மாவட்டத் தலைவர் ம.கண்ணன், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஏசுராஜா, மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் சந்துரு மற்றும் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செய லாளர்கள், ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தோழர் மூர்த்தியின் மறை விற்கு கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப் பினர்கள் க.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், டி.ரவீந்திரன், கட்சியின் கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை உள்ளிட்டோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.