தஞ்சாவூர், மார்ச் 18- ஒருங்கிணைந்த தஞ்சா வூர் மாவட்டத்தில்தான் பொது வுடைமை, இடதுசாரிகள், தமிழு ணர்வு, சமுதாய வளர்ச்சி போன்ற வற்றை சிந்திக்கிற இலக்கிய வாதிகளும், எழுத்தாளர்களும் ஏராளமானோர் உள்ளனர் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தஞ்சாவூர் அரண்மனை வளா கத்திலுள்ள சங்கீத மஹால், சரஸ்வதி மஹாலில் தமிழக அரசு பொது நூலகத் துறை, பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பில் காவிரி இலக்கி யத் திருவிழாவை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசிய தாவது: காவிரிப் படுகை வேளாண்மை சார்ந்தது மட்டுமல்லாமல், பல எழுத்தாளர்களையும், தமிழ் இலக் கியவாதிகளையும் வளர்தெடுத்த பகுதியாகத் திகழ்கிறது. நம் சமு தாயத்தையும், மக்களுடைய வாழ்வாதாரத்தையும் எண்ணி, எண்ணி நேரம் போதவில்லை என எழுதுகிறவர்கள்தான் நம்முடைய இலக்கியவாதிகளும், எழுத்தா ளர்களும் என்பது உண்மைதான். இலக்கியவாதிகளும், எழுத்தா ளர்களும்தான் ஒரு இனத்தின் பாது காப்புக் கேடயமாக இருக்கின்ற னர் என பல்வேறு ஆய்வுகள் கூறு கின்றன. தமிழக முதல்வரின் நடவ டிக்கையால் ரூ. 18.43 கோடி மதிப் பில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் அனைவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும். ஏறத்தாழ 2,600 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருள்கள் மூலம் எப்படி நம் தமிழினம் வாழ்ந்துள் ளது. தமிழ் என்கிற மொழி அப் போது எப்படியெல்லாம் இருந்தது என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம்.
இலக்கியவாதிகள், எழுத்தா ளர்கள் ஒரு இனத்தின் பாதுகாவ லர்கள் என்பது உண்மைதான். மனி தனின் கண்டுபிடிப்புகளில் எது மிக வும் கவர்ந்தது என அய்ன்ஸ்டீனி டம் கேட்டபோது, அவர் உடனடி யாக புத்தகம்தான் என பதிலளித் தார். அந்தப் புத்தகத்தின் மதிப்பு என்பது நல்ல எழுத்தாளர்கள், நல்ல இலக்கியவாதிகள் கிடைக் கும்போது, அதை உணர முடி யும். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுவுடைமை, இடதுசாரிகள், தமிழுணர்வு, சமு தாய வளர்ச்சி போன்றவற்றை பற்றி சிந்திக்கிற இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் ஏராளமானோர் உண்டு. ஜானகிராமன், தஞ்சை ப்ரகாஷ், சி.எம்.முத்து, பட் டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உட்பட அனைவரும் ஒருங்கி ணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள்தான். சமுதா யத்தைப் பற்றி அதிகமாக எழுதி யவர்களும், சிந்தித்தவர்களும் இவர்கள்தான். இதற்கெல்லாம் மேலாக முத்தமிழறிஞர் கருணா நிதி பிறந்ததும் இந்த ஒருங்கி ணைந்த தஞ்சாவூர் மாவட்டம் என்ற பெருமையைத் தாங்கி நிற்கிறது. இந்த இரு நாள் நிகழ்வில் அனைவரது பேச்சுகளையும் புத்தகமாக வெளியிட வேண்டும் எனக் கூறியுள்ளேன்” என்றார் அமைச்சர். பின்னர், கட்டுரை, கவிதை, பேச்சு, பாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவுக்கு மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேக ரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீல மேகம் (தஞ்சாவூர்), மேயர் சண். ராமநாதன், மாவட்ட ஊராட்சி தலை வர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் க.சரவண குமார், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் க. எழிலன், சரஸ்வதி மஹால் நூலக நிர்வாக அலுவலர் மு.முத்தையா, முதன் மைக் கல்வி அலுவலர் மு.சிவக் குமார், மாவட்ட நூலக அலுவலர் பா.முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.