தஞ்சாவூர், பிப்.3- சிஐடியு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், கும்பகோணம் மண்டலம் சார்பில் சுற்றுச் சூழலை பாதுகாத்திட, பொது போக்குவரத்தை பலப் படுத்திட, விபத்தை தடுத்திட, பொதுத் துறையை பாதுகாத்திட வலியுறுத்தி பிப்ரவரி 12 (ஞாயிற் றுக்கிழமை) காலை 6 மணிக்கு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து, விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர் பெருமக்கள், தொழிற்சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டியில் பங்கேற்கும் 14 வயதுக்கு மேல் 27 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிற்கு முதல் பரிசு ரூ.8 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.6 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம், 14 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரி விற்கு முதல் பரிசு ரூ.6 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மாரத்தானில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவியர் மற்றும் ஆண்கள், பெண்கள் நுழைவு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். முன் பதிவிற்கு கடைசி நாள் பிப்ரவரி 9 மாலை 6 மணி. 9894377805, 7010411396 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் டி.காரல் மார்க்ஸ் தெரி வித்துள்ளார்.