தஞ்சாவூர், ஜன.7- தஞ்சை கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு சிறப்பு மேளா நடைபெறுகிறது என முது நிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தஞ்சை கோட்ட முது நிலை தபால் கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘தபால் நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் கிசான்விகாஸ் பத்திரத்தின் வட்டி 7.2 ஆகவும், தேசிய சேமிப்பு பத்திரத்தின் வட்டி 7 விழுக்காடு ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் 7.6-ல் இருந்து 8 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தபால் சேமிப்பு வங்கி கணக்குதாரர்கள் தங்களது மொபைல் எண் மற்றும் ஆதார், பான் எண்களை அவர்களது கணக்குகளு டன் இணைக்க வேண்டும். மொபைல் எண்ணை இணைப்பதன் மூலம் பொதுமக்கள் தங்க ளின் பரிவர்த்தனைகளை குறுஞ்செய்தி மற்றும் இ-பாஸ்புக் வாயிலாக அறியலாம். தற்போது தஞ்சை கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்குகளுக்கான சிறப்பு மேளா மார்ச் 31- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தபால் நிலையங்களில் புதிய சேமிப்பு கணக்கை தொடங்கி உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்க ளின் பயன்களை பெறலாம்’’ என தெரி விக்கப்பட்டுள்ளது.