தஞ்சாவூர், ஏப்.4 - தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் துறை சார்பாக, தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் பூ.கு.சிறிவித்யா தலைமை வகித்தார். பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப புல முதன்மை யர் எஸ்.செந்தமிழ்குமார், கல்விப்புல முதன் மையர் ஏ.ஜார்ஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திருச்சிராப்பள்ளி பாரத பகுமின் நிறுவ னத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகள் பிரிவு பொது மேலாளர் கே.ரவீந்திரன் கருத்த ரங்கை துவக்கி வைத்தார். அவர் பேசுகை யில், “இந்தியா 2035 ஆம் ஆண்டுக்குள் 23,000 எம்.எம் எரிசக்தி இலக்கைக் கொண்டு பயணிப் பதால், இயந்திரவியல் மற்றும் மரபு சாரா ஆற்றல் துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் அத்த கைய படிப்புகளை தேடிச் சென்று படிக்க வேண்டும்” என்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வேலுசாமி நிறைவுறையாற்றி, வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகைள வழங்கினார். கருத்தரங்கில், பல்வேறு கல்வி நிறுவ னங்களிலிருந்து 60-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறைப் பேரா சிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.