districts

மக்கள் பிரச்சனைக்காக போராடும் மார்க்சிஸ்ட் கட்சியினரை மிரட்டுவதா?

கும்பகோணம், ஜூலை 20 - திருவிடைமருதூர் ஊராட்சி  ஒன்றியத்துக்கு உட்பட்ட பருத்திச்சேரியில், ஜூலை 15 அன்று ஊராட்சி மன்ற  அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு பொதுமக்களின் அடிப்படை வசதிகளான சாலை  வசதி, குடிநீர் நீர்த்தேக்க தொட்டி, மின் கம்பம், குட முருட்டி ஆற்று மரப்பாலத்தை சிமெண்ட் பாலமாக கட்டிக் கொடுத்தல் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த போராட்டம் முடிந்த மறுநாள், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுபா திருநாவுக்கரசு (திமுக) மற்றும் வட்டார வளர்ச்சி அலு வலர்கள், அதிகாரிகள் சம்பந்தப் பட்ட பருத்திச்சேரி கிரா மத்திற்கு வந்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவர்களிடம் பருத்திச்சேரி கிராமத்தில் அடிப் படை வசதிகள் இல்லாதது குறித்து கூறினார். அப்போது  திருவிடைமருதூர் ஒன்றிய  பெருந்தலைவர் சுபா திரு நாவுக்கரசு, தன்னிச்சையாக பொறுப்பற்ற தன்மையில், சிபிஎம் உறுப்பினர்களிடம் “நீங்கள் பேர் வாங்குவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்களா? யாரை கேட்டு நடத்தினீர்கள்? கூட்டணி கட்சியில் சீட்டு  வாங்கவா?” என தரக்குறை வாக மிரட்டும் பாணியில் பேசியு உள்ளார். இதனையறிந்து கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனி வேல் உள்ளிட்ட சிலர், அங்கு சென்று அதிகாரிகள் மற்றும் ஒன்றியத் தலைவரிடம் கட்சியை அவதூறாக பேசி யதற்கு விளக்கம் கேட்டனர்.  அதற்கு அவர், “பேர் வாங்கு வதற்காக கூட்டணி கட்சியில்  இருந்து கொண்டு பேசு கிறீர்களா? சீட்டு வாங்குவதற் காகவா? என்னை கேட்டு ஆர்ப் பாட்டம் நடத்த வேண்டும். யார் அனுமதியில் செய்தீர்கள்” என்று கேட்டார். அப்போது, எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து  தர வேண்டும் என்ற கோரிக் கையுடன் பொதுமக்கள் கூட்டம் கூடியது. இந்நிலையில், அங்கு  புதிதாக போடப்பட்ட கீழத்தெரு  தார்ச்சாலையை தரமாக இல்லை என்று கூறிய போது, “அப்படித்தான் செய்வோம்” என்று அலட்சியமாகப் பேசி விட்டு, அதிகாரிகளை மட்டும் விட்டுவிட்டு காரில் ஏறிச் சென்று விட்டார். இதனையடுத்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர், “ஒன்றியத் தலைவரின் மக்கள் விரோத பேச்சும் நடவ டிக்கையும் கண்டிக்கத்தக்கது. இதை சம்பந்தப்பட்ட கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் கண்டிக்க வேண்டும். மக்களை அலட்சியப்படுத்தி கோரிக்கைகளை நிறை வேற்றாமல் அவதூறாக பேசி வரும் திருவிடைமருதூர் ஒன்றி யத் தலைவர் சுபா திருநாவுக் கரசு மீது மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையேல் அவர் மீது  சட்டரீதியான நடவடிக்கை கோரி போராட்டம் நடைபெ றும்” என அதிகாரிகளிடம் தெரி வித்தனர்.