districts

img

“பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டும், பட்டா வழங்கப்படவில்லை” ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

சேலம், நவ.27- இலவச வீட்டுமனைக்கான பய னாளிகள் தேர்வு செய்யப்பட்டும், இதுவரை பட்டா வழங்கப்படா ததைக் கண்டித்து, மாற்றுத்திறனா ளிகள் ஓமலூர் வட்டாட்சியர் அலுவ லகத்தில் குடியேறும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டுமனை பெற விண் ணப்பித்து, அதில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டும், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளி டம் முறையிட்டும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏஏஒய் ரேசன்  அட்டை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையை உறுதி செய்ய வேண் டும்.

மேலும், கடுமையான வேலையை செய்யச்சொல்லி நிர் பந்திக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் புதனன்று  ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத் தில், குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, பாய், தலையணை, பாத்திரங்கள், அடுப்பு உள்ளிட்ட பொருட்களு டன் பேரணியாக வந்த மாற்றுத் திறனாளிகள், வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நின்று முழக்கங்களை  எழுப்பினர். ஒரு கட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல போராட்டக்குழு முயற்சித்த போது, அவர்களை தடுத்து நிறுத் திய காவல்துறைக்கும், போராட் டக்காரர்களுக்கும் இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு வெளியே  உள்ள மேட்டூர் மெயின் சாலையில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். கொட்டும் மழையிலும் இப் போராட்டம் தொடர்ந்தது.

இதையடுத்து போராட்டத்தின் நிலை குறித்து, சங்கத்தின் மாநில  பொதுச்செயலாளர் ஜான்சி ராணிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, அவர் மாநில அரசு அதிகாரி களுடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டார். அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துடனும் பேசப் பட்டது. இதன்பின் சம்பவ இடத் திற்கு வந்த வட்டாட்சியர், ஒரு மாத காலத்திற்குள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங் கப்படும். மேலும், மற்ற கோரிக்கை கள் தொடர்பாக உரிய நடவடிக்கை  எடுக்கப்படும்,

என உறுதியளித் தார். அதனையேற்று மாற்றுத்திற னாளிகள் அனைவரும் அங்கி ருந்து கலைந்து சென்றனர். முன்ன தாக, இப்போராட்டத்திற்கு மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலப் பொரு ளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி தலைமை வகித்தார். இதில், மாவட் டச் செயலாளர் எம்.குணசேகரன், இணைச்செயலாளர் அமலா ராணி,  ஓமலூர் தாலுகாத் தலைவர் சிவா,  செயலாளர் சாவித்திரி, மாவட்டக் குழு உறுப்பினர் கோவிந்தன், சிபிஎம் தாலுகாச் செயலாளர் சேகர்  உட்பட 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.