districts

img

குமார்-ஆனந்தன் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்

கடலூர், ஆக.26- கடலூர் புதுப்பாளையத்தில் கள்ளச் சாராயத்திற்கு எதிராக போராடியதால் படுகொலை செய்யப்பட்ட குமார் - ஆனந்தன் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போதைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,‘ வேண்டாம் போதை, வேண்டும் வேலை’என்ற முழக்கத்தோடு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரச்சாரம் மேற்கொண்டார். பாதிரி குப்பத்தில் தொடங்கி கே.என். பேட்டை, திருவந்திபுரம், தொட்டி, வானமா தேவி, சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, வண்டி குப்பம், ராமாபுரம், வசந்தராயன் பாளையம், சான்றோர் பாளையம், மணக்குப்பம், பீமாராவ் நகர், வழியாக வந்து கடலூர் முதுநகரில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் பி.பிரசாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எம். கலை வாணன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ் கண்ணன், டி.கிருஷ்ணன், மாவட்ட தலைவர் கே.சின்னத்தம்பி, எஸ். வினோத்குமார், பி.சதீஷ்குமார், துணை செயலாளர் ஜே. சிவலோகம் மாநகர செயலாளர் ஆனந்தராஜ், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய பொரு ளாளர் சிவன்ராஜ் நன்றி கூறினார். போதைக்கு எதிராக அறிவியல் இயக்க கலைக்குழுவின் கலை நிகழ்ச்சியும் நடை பெற்றது. அனுமதி மறுப்பு பாதிரிக்குப்பத்தில்  வாலிபர் சங்கத்தினர் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி பெற்றிருந்தனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது தெரிவித்தனர். இதனால் காவல்துறையினருக்கும் வாலிபர் சங்கத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருசக்கர வாக னத்தில் செல்லாமல் அந்தந்த பகுதிக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்ள அனு மதித்தன் அடிப்படையில், நான்கு சக்கர வாகனங்களில் சென்று பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.