திருவள்ளூர், அக்.9- வல்லூர் அனல் மின் நிலையத்தில் 20 விழுக்காடு ஊதிய உயர்வு, உற்பத்தி போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் புதனன்று (அக்.9), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளுதல், கொதிகலன் கையாளு தல், டர்ஃபன் இயக்குதல், ஜெனரேட்டர் இயக்குதல், கடல் நீர் சுத்திகரிப்பு பகுதி, சாம்பல் கையாளும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்ற னர். பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக் காக இவர்கள் பல கட்ட போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதனன்று (அக் 10), அனல் மின் நிலைய வாயிலில் சிஐடியு டன் இணைந்து ஒப்பந்த தொழிலாளர் கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். தொழிலாளர்களுக்கு 20 விழுக் காடு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் எனவும் கடந்த நிதியாண் டில் அனல் மின் நிலைய நிர்வாகம் அதிக லாபத்தை ஈட்டி உள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு உற்பத்தி போனஸ் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் இ.ஜெயவேல், கிளை நிர்வாகிகள் சதீஷ், சூரியநாராயண், பிரபாகரன் ஆகியோர் பேசினர்.