சென்னை, அக். 22 - தீபாவளி பரிசு பொருட்கள் குறைத்ததை கண்டித்து செவ்வாயன்று (அக்.22) கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பூங்கா ஊழியர்கள் என நான்காம் நிலை ஊழியர்களுக்கான ‘பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டு றவு சங்கம்’ சிந்தாதிரிப்பேட்டை யில் செயல்படுகிறது. இதன் உறுப்பினர்க ளுக்கு ஆண்டுதோறும் தீபாவளியின் போது பொதுப்பேரவை நடத்தி இனிப்பு, காரம் உள்ளிட்ட 11 வகை யான பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த சங்கத்தில் இயக்குநர்களாக சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் இருந்தபோது, தீபாவளி பரிசு பொருட்கள் வழங்க ரூ.95 லட்சம் வரை செலவிட்டனர். இயக்கு நர்களின் பதவி காலம் முடிந்த நிலையில், அரசு அதிகாரிகள் சங்கத்தை நிர்வகித்து வருகின்ற னர். தீபாவளியின்போது நடைபெறும் பொதுப் பேரவைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுப்பினர்களுக்கு முறை யாக தகவல் தருவதில்லை. பரிசு பொருட்களுக்கான ஒதுக்கீட்டை ரூ.30 லட்சம் அளவிற்கு குறைத்து விட்டனர். இதனால் 5 பொருட்கள் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, கூட்டுறவு சங்க உறுப்பி னர்களுக்கு 11 வகை யான பொருட்களை வழங்க கோரி செவ்வாயன்று (அக்.22) கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செய லாளர் பி.சீனிவாசுலு, “கூட்டுறவு சங்கம் 11 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியுள்ள நிலையில், பரிசுப் பொருட்களுக்கான ஒதுக்கீட்டை குறைத்தது ஏன்? பொதுப்பேரவை அனைவருக்கும் தகவல் கொடுத்து, தற்போது அறிவித்துள்ள பரிசுப் பொருட்கள் அனைத்தை யும் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து அரசு தேர்தலை நடத்த வேண்டும்” என்றார். சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராள மான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.