districts

img

பண்டிகைக்கால மலிவு விலை கடைகளை திறந்திடுக!

சென்னை, அக். 26 - மலிவு விலையில் பொருட்களை வழங்க பண்டிகைக்கால கடைகளை திறக்க கோரி சென்னையில் பெண்கள் நூதன போராட்டம் நடத்தினர். விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து விடு கிறது. எனவே, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில், பண்டிகைக் கால மலிவு விலை கடைகளை திறக்க அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கோரி வருகிறது. இதனை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் சைதாப் பேட்டையில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜோதியம்மாள் நக ரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், விலைவாசி உயர்வை குறிக்கும் வகையில் களி மண்ணால் முறுக்கு, வடை, சீடை, லட்டு செய்தும், தண்ணீரில் வடை சுட்டும் போராட்டம் நடத்தினர். சங்கத்தின் தெ சென்னை மாவட்டச்செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், பகுதி நிர்வாகி கள் செல்வி, மகாலட்சுமி, தனலட்சுமி, அன்பரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுரவாயல் பகுதி அயப்பாக்கம் கிளை சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு பகுதி பொருளாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எஸ். சரவணச்செல்வி, பகுதிச் செயலாளர் சித்ரா, நிர்வாகி கள் தாரா, சரோஜா, எலிசபெத், திருமகள், புவனேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர்.