districts

img

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருமுட்டம் வட்டச் செயலாளர் தினேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், வட்ட குழு உறுப்பினர்கள் வெற்றி வீரன்,  தங்கசாமி,  கிருஷ்ணமூர்த்தி, தேவேந்திரன், விஜயகாந்த் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் மேற்கு ஒன்றியத்தில் ஜெ.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் கண்டன உரையாற்றினார். இதேபோன்று உளுந்தூர்பேட்டை கிழக்கு-மேற்கு,திருநாவலூர் கிழக்கு- மேற்கு,சங்கராபுரம், ரிஷிவந்தியம்,திருக்கோவிலூர், சின்னசேலத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

ஓய்வூதியத்தை தமிழக அரசே நேரடியாக பொறுப்பேற்று வழங்கும் என்ற உத்தரவாதத்துடன் முத்தரப்பு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தமிழகம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். செந்தில்,மின்வாரிய மாவட்டத் தலைவர் கே.ஜெயக்குமார், செயலாளர் கே.சீனிவாசன் மற்றும் பலர் உரையாற்றினர்.