districts

img

சாலையோர கடையை அகற்றியதால் அதிர்ச்சியில் பெண் வியாபாரி மரணம்! மார்க்சிஸ்ட் கட்சி, வியாபாரி சங்கத் தலைவர்கள் அஞ்சலி

சென்னை, ஜூன் 13 - சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிய போது ஏற்பட்ட அதிர்ச்சியில் கிருஷ்ண வேணி என்ற வியாபாரி மரண மடைந்தார்.

பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் கால காலமாக சாலையோரமாக வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற் கெதிராக வியாபாரிகள் தொடர்ந்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில் ஜூன் 13  அன்று 59வது வார்டு உதவி செயற்பொறியாளர் கார்த்திக் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் காவல்துறை பாதுகாப் போடு வந்து சாலையோர கடைகளை அகற்றினர். ஜெசிபி எந்திரங்களை கொண்டு பொருட்களை லாரிகளில் அள்ளிப் போட்ட னர். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சம்பவ இடத்தி லேயே கிருஷ்ணவேணி (வயது 75) என்ற பெண் வியா பாரி உயிரிழந்தார்.

இதுகுறித்து சென்னை மாநகர் சிறுகடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.வி. கிருஷ்ணன் குறிப்பிடு கையில், “மாநகரில் வியாபா ரம் செய்யும் பகுதிகளை நகர விற்பனைக் குழு வரை யறுக்காமல் உள்ளது. அதற்குள்ளாகவே ஆங்காங்கே மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்ற முற்படுகின்றனர். அதனை வியாபாரி சங்கங் கள் தடுத்து வருகின்றன.

என்எஸ்சி போஸ் சாலை யோர கடைகள் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தர வுப்படி 3 மாற்று இடங்களை வழங்கினர். அங்கெல்லாம் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மீண்டும் என்எஸ்சி போஸ் சாலையிலேயே வியாபாரம் செய்து வருகின்றனர்.

வியாபாரிகளின் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு, சாலையோர கடைகளை மாநகராட்சி முறைப்படுத்த வேண்டும். மாறாக, வியாபாரிகளை அப்புறப்படுத்தும்போது உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் நிகழ்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கடைகளை அகற்றும் போது, பெண் வியாபாரி ஒருவர் தனது பொருட்களை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு ஓடும் போது பேருந்து மோதி உயிரி ழந்தார். எனவே, இத்தகைய அராஜக நடவடிக்கைகளை மாநகராட்சி கைவிட வேண்டும்” என்றார்.

சிபிஎம் இரங்கல்

பிரேத பரிசோதனைக்கு பிறகு கொருக்குப்பேட்டை யில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த கிருஷ்ணவேணியின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, தலைவர் எம்.தயாளன், சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவர் இரா.அருள்குமார், சென்னை மாநகர் சிறு கடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.வி கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.