districts

img

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர், பிப். 12 - சுரண்டலுக்குள்ளாகும் சுமைப்பணி தொழிலாளர்களின் நலனையும், வேலை யையும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் நேஷனல் சர்க்கிள் அருகில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன் தலை மையிலும், காட்பாடியில் ரயில்வே கூட் செட் முன்பு கூட்செட் கிளை செய லாளர் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பி.ராமச்சந்திரன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஏ.பழனியப்பன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாவட்டச் செயலாளர் பெருமாள், வாலிபர் சங்க மாவட்ட துணைத் செயலாளர் எல்.நவீன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கடலூர் கடலூர் சிப்காட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு முன்பு கோரிக்கை களை வலியுறுத்தி டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.தண்டபாணி தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் வி.சுப்புராயன், இணைச் செயலாளர் வி.திருமுருகன், ஏ.பாபு, டாஸ்மாக் சுமை பணி சங்க நிர்வாகிகள் எம்.கருணா நிதி, என்.சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.