மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வில்லிவாக்கம் பகுதி உறுப்பினர் வெ.பன்னீர் செல்வம் - சத்தியா தம்பதியரின் மகன் ராகுல் கி.ஹரிணி திருமண வரவேற்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன், பகுதிச்செயலாளர் ஜி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.