விழுப்புரம், செப்.29- தென்பெண்ணை ஆற்றில் இருந்த இரண்டு தடுப்பு அணைகள் உடைந்து கட்ட தவறி வரும் நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் செப்.25 அன்று 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அடுத்த நாள், திருக்கோவிலூர் அணைக்கு வந்தடைந்தது. பின்னர், அங்கு தண்ணீர் தேக்கப்பட்டு மலட்டாறு, பம்பை வாய்க்கால், ராகவன் வாய்க்கால், வடமருதூர் வாய்க்காலில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள உபரி நீர் தென் பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது, தென்பெண்ணை யாற்றில் விழுப்புரம் அருகே நீரை தேக்கி விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த எல்லீஸ்சத்திரம் அணை, தளவானூர் அணை ஆகிய கடந்த சில ஆண்டு களாக உடைந்துள்ளது. இதனால் தண்ணீரைத் தேக்கி வைக்க முடி யாமல் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த தடுப்பு அணைகள் நம்பி உள்ள ஆயிரக்கணக்கான விவ சாயிகள் இந்த ஆண்டும் கவலைகள் அடைந்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன் கூறுகையில், “தென்பெண்ணை ஆற்று நீர் ஆதாரத்தை கொண்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேலும் இரண்டு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்”என்றார். எல்லீஸ் சத்திரம்,தளவானூர் தடுப்பு அணைகள் இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக உடைந்தது. இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே தண்ணீரை தேக்கி வைத்து விவ சாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் சென்று கலந்து வரு கிறது. இந்த உடைந்த இரண்டு தடுப்பு அணைகளின் கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ள நிலையில் இன்னும் பணி துவக்காமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகள் நலன் காக்கும் வகை யில் இரண்டு தடுப்பு அணைகளின் கட்டுமானப் பணிகளை உடனடியாக துவக்கி தரமானதாக கட்டி கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.