சென்னை, அக். 26 - தொகுப்பூதிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சனிக்கிழமை யன்று (அக்.26) சென்னையில் தொழிற்பயிற்சி அலுவலர்கள் உண்ணா நிலை போராட்டம் நடத்தினர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு தனியார் கூட்டு (பிபிபி), திறன் மேம்பாட்டு பயிற்சி (சிஓஇ), கைவிஞர் பயிற்சி திட்டம் (சிடிஎஸ்) ஆகியவற்றின் கீழ் 150 பயிற்றுநர் மற்றும் உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்தாண்டு உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது. அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் சி.வி.கணேசன், முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு பணி நிரந்தரம் செய்வதாக உறுதி யளித்தார். எனவே, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் சா.டேனியல் ஜெயசிங், சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.ரமேஷ், பொருளாளர் என்.திருநாவுக்கரசு உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.