districts

img

காந்தலவாடி தார் கலவை ஆலைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

விழுப்புரம், மே 20- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் வட்டம், காந்தலவாடி கிராமத்தில் அமைக்கப்படும் தார் கலவை ஆலையை தடுத்து நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் பரமேஸ்வரியிடம் திங்களன்று(மே.20) கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், திருவெண்ணைநல்லூர் வட்டம், காந்தலவாடி ஊராட்சிக்குட்பட்ட பெரிய ஏரி மற்றும் குடியிருப்புக்கு அருகில் தார் கலவை ஆலை கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது, இதற்கு இயந்திரங்களும், பெரிய பெரிய உருளைகள் வந்து இறங்கி உள்ளன. இந்த ஆலையானது தனியார் விவசாய நிலத்தில் அமைக்கப்படுகிறது. அது தனியார் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டாலும், அப்பகுதியில் குடி யிருக்கும் பொதுமக்கள் மற்றும் பக்கத்து கிராம மக்கள் என அனைவரும் இந்த ஆலை வெளியிடும் நச்சு புகையின் காரண மாக  பல்வேறு நோய்களுக்கு இலக்காகி வரு கின்றனர்.  மேலும் இந்த சுகாதாரக்கேடு, விளை நிலங்களை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. தார் உற்பத்தி செய்யும் போது கடும் வெப்பம் அனல் பறக்கும் காற்றை சுவா சிக்கும் போது காந்தலவாடி கிராமத்தில் இருப்பவர்கள் மட்டும் இன்றி சுற்றி இருக்கும் கிராம மக்களும் பாதிப்படை வார்கள். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள்,விவசாயமும், கால் நடைகளும் பாதிப்படைந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் வாழ்வாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது. நச்சுக் கலந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் தாக்குவதற்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூடுதலாக பாதிப்புக்கு ஆளானார்கள்.  அதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு காந்தலவாடி யில் அமைய உள்ள தார் கலவை ஆலையை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கீதா, வட்ட செயலாளர் கே.சிவக்குமார், வட்ட குழு கோவிந்தராஜ் கிளைச் செய லாளர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர். தொடர்ந்து மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி ஒரு வார காலத்திற்குள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.