districts

img

ஊராட்சி மன்றத் தலைவர் அத்துமீறல்!

விழுப்புரம், செப்.26- வானூர் வட்டம், நல்லா வூர் ஊராட்சி மன்ற தலை வரின் அதிகார அத்து மீறல்களை கண்டுக் கொள்ளாத பிடிஓ தேவ தாஸ் ஆகியோர் மீது  நட வடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், நல்லாவூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு ஏராள மானோர் பதிவு செய்துள்ள னர். ஆனால். ஊராட்சி மன்ற தலை வரின்‌கண வர் ஏழுமலை. பயனாளி களுக்கு வேலை வழங்கா மல் அலைகழித்து வரு கிறார்.  இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ தாசிடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஆதர வாக செயல்படுகிறார்  என்ப தால் கோபமடைந்த நல்லா வூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் உப்பு வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிளியனூர் காவல் துறையினர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .அப்போது உடன் பாடு ஏற்பட்டதால் போராட்ட த்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.