விழுப்புரம்,செப்.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் வட்ட மாநாடு கோலியனூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டக்குழு உறுப்பினர்கள் வி.பாலகிருஷ்ணன், டி.ராமமூர்த்தி, எஸ்.நீலா ஆகியோர் தலைமை தாங்கினர். இராஜாராமன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கி துவக்கி வைத்து பேசினார்.வேலை அறிக்கையை வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன், வரவு-செலவு அறிக்கையை ச.மதுசுன் ஆகியோர் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன்,வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி முடித்து வைத்து உரையாற்றினார். வட்ட குழு உறுப்பினர் ஆர்.வீரபத்திரன் நன்றி கூறினார். இம்மாநாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு அரசு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், 100 நாள் வேலையில் முழுமையாக கூலி 319 வழங்க வேண்டும், சமூக விரோத கூடாரமாக மாறிவரும் கோலியனூர் கூட்ரோடு நெடுஞ்சாலைத்துறை பங்களாவை சீரமைத்து கண்காணிக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.11 பேர் கொண்டு விழுப்புரம் வட்டக்குழுவின் செயலாளராக ஆர்.கண்ணப்பன் தேர்வு செய்யப்பட்டார்.