சென்னை, டிச. 26 - இந்திய சமூகநீதிப் போரில் முதல் களமான வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு சிறப்பு விழா வியாழனன்று (டிச.28) நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கின்றனர். கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து, 1924-ஆம் ஆண்டு அங்கு மிகப் பெரிய போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது, போராட்டத்தை தொடர்ந்து நடத்த, போராட்டக்குழு தலைவர்கள் தந்தை பெரியாருக்கு அழைப்பு விடுத்தனர். அதனையேற்று, வைக்கம் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி மக்களிடம் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார். போராட்டம் தீவிரமடைந்தது. மக்கள் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். இதனால், தந்தை பெரியார் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். முதல் முறை ஒரு மாதமும், இரண்டாம் முறை ஆறு மாதமும் அவருக்கு தண்டனை அளிக்கப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை யில் கால்களிலும், கைகளிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர் சிரமபடுத்தப்பட்டார். இந்த நிலையில், திருவாங்கூர் மகா ராஜா இயற்கை செய்திடவே, ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார். தந்தை பெரியாருடன் சமாதானம் செய்து கொண்டு, வைக்கம் தெருவில் நடக்கக் கூடாது என்ற தடையை ராணி நீக்கினார். ஆனால், தந்தை பெரியாரின் போராட்டம் மகத்தான வெற்றியில் முடிந்து வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவில் சமூக அளவில் சாதி காரணமாக நிலவும் ஏற்றத் தாழ்வுகளை ஒழித்திட நடைபெற்ற முதல் போராட்டம் இந்த வைக்கம் போராட்டம் ஆகும். இந்தப் போராட்ட வெற்றியின் 100 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரையும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூலையும் வெளியிடுகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்று கிறார்.