ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், 58ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10 அன்று மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனையொட்டி செவ்வாயன்று (டிச.27) கே.கே.நகர் (சென்னை தெற்கு), வள்ளுவர்கோட்டம் (சென்னை மையம்) மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.
மின்வாரியத்தில் உள்ள 59 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே செவ்வாயன்று (டிச. 27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் தண்டையார்பேட்டை செயற்பொறியாளர் அலுவலகம் அருகே செவ்வாயன்று (டிச. 27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டி.சந்திரசேகர், மதன் கோபால் (சிஐடியு), தமிழ்செல்வன் (பொறியாளர் சங்கம்), பாஸ்கர் (அண்ணா தொழிற்சங்கம்), சொக்கலிங்கம் (பொறியாளர் யூனியன்) ஆகியோர் பேசினர்.