districts

img

ஊத்தங்கரையை வருவாய் கோட்டமாக அறிவிக்கவேண்டும் சிபிஎம் மாநாடு கோரிக்கை

கிருஷ்ணகிரி,நவ.4-  மார்க்சிஸ்ட் கட்சி ஊத்தங்கரை வட்டம்  மற்றும் சிங்காரப்பேட்டை பகுதிக்குழுவின் 13 வது மாநாடு செல்வராஜ்,பாஞ்சால ராஜன்,எத்திராஜ், இளவரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் எஸ்.தண்டபாணி கொடியேற்றினார். அண்ணாமலை வரவேற்றார். இளவரசன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு துவக்க உரையாற்றினார். ஊத்தங்கரை வட்டச் செயலாளர் கே.மகாலிங்கம், சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் ஆர்.சபாபதி இருவரும் அறிக்கையை சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.கோவிந்தசாமி, சி.பி.ஜெயராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் நிறைவுரையாற்றினார். கவிமணி தேவி நன்றி கூறினார். தீர்மானங்கள் கடப்பாறை ஆற்றில் அணை கட்ட வேண்டும்,அங்குத்தி சுனையை சுற்றுலாத்தலமாக விரிவுபடுத்த வேண்டும்,ஊத்தங்கரையை வருவாய் கோட்டமாகவும், கல்லாவியை பேரூராட்சியாகவும் அறிவித்திட வேண்டும். தலித்,பழங்குடி, மலைவாழ் மக்களின் தொகுப்பு வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்துள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டக்குழு தேர்வு இரண்டு குழுக்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட 15 பேர் கொண்ட ஊத்தங்கரை வட்ட குழுவின் செயலாளராக ஆர்.சபாபதி செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.